• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை புலியகுளத்தில் பிரபல ரவுடி குத்திக்கொலை – 2 பேருக்கு வலைவீச்சு

February 11, 2019 தண்டோரா குழு

கோவை புலியகுளத்தில் பிரபல ரவுடி குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை புலியகுளம் சிறு காளியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் லியோ மார்டின். இவர் மீது கொலை மற்றும் அடி தடி வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது. பிரபல ரவுடியான இவர் இரவு அலமேலுமங்கா லே அவுட் பகுதியில் கத்தி குத்து காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதைப்பார்த்த அப்பகுதியினர் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து இராமநாதபுரம் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தியதில், ரவுடி லியோ மார்டின் மதுபோதையில், புலியகுளம் துல்லா ஆறுமுகம் வீதியை சேர்ந்த தருண் என்ற இன்பிரண்ட்ராஜன், மற்றும் கொண்டசாமி கோவில் வீதியை சேர்ந்த விக்கு என்ற சண்முகம் ஆகியோரிடம் கஞ்சா கேட்டு மிரட்டியதாக கூறுப்படுகின்றது. இதனால் ஆத்திரம் அடைந்த இரண்டு பேரும் ரவுடி லியோ மார்டினை கத்தியால் குத்தியதும் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, தலைமறைவான 2 பேரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர். கோவையில் ரவுடி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க