• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உலக வலிப்பு நோய் தினத்தை முன்னிட்டு கோவையில் விழிப்புணர்வு பேரணி

February 11, 2019 தண்டோரா குழு

உலக வலிப்பு நோய் தினத்தை முன்னிட்டு கோவையில் விழிப்புணர்வு பேரணியானது நடைபெற்றது

உலக முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் இன்று வலிப்பு நோய் தினமாக அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில் சுமார் 6.5 கோடி மக்கள் வலிப்பு நோயுடன் வாழ்ந்து வருகின்றனர். இதை தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் நீயுராலஜிக்கள் சொசைட்டி சார்பாக நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை அரசு மருத்துவமனை தலைவர் அசோகன் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

இதில் வலிப்பு நோய் பாதிப்பு ஏற்படுவதை தடுப்பதற்கான வழிமுறைகள் மற்றும் வலிப்பு நோய் குணமடைய செய்வது குறித்தான பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் கையில் ஏந்தியபடியும், பொதுமக்களுக்கு துண்டு பிரசாரங்கள் வழங்கியும் விழிப்புணர்வு பேரணி நடைப்பெற்றது. இந்த பேரணியானது அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.இதில் நரம்பியல் நிபுணர்கள்,மருத்துவர்கள், செவிலியர்கள் என ஏரலமனோர் கலந்துகொண்டனர்.

மேலும் படிக்க