February 8, 2019
தண்டோரா குழு
தகவல் தொழில்நுட்பம் மற்றும் நெட்வொர்க்கிங் முன்னேற்றங்கள் பற்றியான புத்தகத்தை முன்னாள் விஞானியான பானுமதி சர்வதேச மாநாட்டில் இன்று வெளியிட்டார்.
கோவை அவிநாசி ரோட்டில் அமைந்துள்ள ஜி.ஆர்.டி அறிவியல் கல்லூரியில் மாணவ மாணவிகளிடையே சில்வர் ஜிப்ளி இன்ஸ்டிடியூஷன் உயர் தரத்தில் தரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இக்கல்லூரியில் இணையதளத்தின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் வலையமைப்பு ஆகியவற்றில் முன்னெடுக்கப்படும் வகையில் இன்று சர்வதேச 6வது மாநாடானது கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
இதில் தொழில்துறை தொழில்முனைகள் மற்றும் பலவகைப்பட்ட களங்களிலிருந்து அறிவியலாளர்கள் சமீபகாலத்தின் முன்னேற்றங்கள், இணையதளம், தகவல் தொடர்பு ஆகியவற்றின் எதிர்காலத்தை வெளிப்படுத்துவதோடு புலத்தில் உள்ள விலிம்பின் முன்னேற்றங்களை பகிர்ந்து கொள்வதற்கான ஆராய்ச்சிகளை மேற்கொன்டனர். இந்த மாநாட்டில் முன்னாள் விஞ்ஞானியான பானுமதி, மற்றும் ராதமணி, சந்தா, கல்லூரி முதல்வர் சுஜாதா, மலேசியா மாநகர பல்கலைகழக சாதிக் ஷார்க்காட்சி, டி ஆர் ஓ பாலச்சந்திரன் ஆகியோர்கள் ஆராய்ச்சிகளை மேற்கொண்ட அனைத்து பிரதிநிதிகளின் விசாரணையை இந்த மாநாட்டில் புத்தகமாக வெளியிட்டனர்.
இதன் மூலம் வரும் காலகட்டங்களில் மாணவர்களிடையே அறிவுத்திறன் வளர்ப்பதற்கு தேவையாக இருக்கும் என்றனர். இதில் பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் ஏரளமனோர் கலந்துகொண்டனர்.