• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நவீன மறுசுழற்சி குப்பை தொட்டியை அறிமுகம் செய்து வைத்த முதல்வர் !

January 31, 2019 தண்டோரா குழு

நவீன மறுசுழற்சி குப்பை தொட்டியை முதலமைச்சர் பழனிசாமி சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள அவரது இல்லத்தில் அறிமுகம் செய்து வைத்தார்.

சமீபத்தில் ஒரு முறை பயன்படுத்தி எரியப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்தது. இதனைத்தொடர்ந்து பிளாஸ்டிக் ஒழிப்பின் தொடர் நடவடிக்கையாக தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் சார்பில் நவீன மறுசுழற்சி குப்பை தொட்டி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த நவீன மறுசுழற்சி குப்பை தொட்டியை முதலமைச்சர் பழனிசாமி சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அவரது இல்லத்தில் அறிமுகம் செய்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

மறுசுழற்சி இயந்திர உற்பத்தியாளர் ஹெப்சிபா, முதல் கட்டமாக 500 மறுசுழற்சி குப்பை தொட்டியை மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, இதன் மூலம் பிளாஸ்டிக் ஒழிக்க முடியும். இதை தயாரிக்க 50 லட்சம் ரூபாய் செலவாகும் , பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கை எடுப்பதன் மூலம் பல்வேறு நோய்களில் இருந்து மக்களை காக்க முடியும் என்று கூறினார்.

மேலும், இந்த மறுசுழற்சி குப்பைத்தொட்டியில் பிளாஸ்டிக் பாட்டிலை போடுவதன் மூலம் மக்களுக்கு டோக்கன் வழங்கப்படும் என்றும் அதை பயன்படுத்தி பல்வேறு இடங்களில் சலுகைகள் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் தெரிவித்தார்.

மேலும் படிக்க