• Download mobile app
07 Feb 2026, SaturdayEdition - 3650
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இலங்கை கடற்ப்படையினரால் கைது செய்யப்பட நான்கு மீனவர்கள் எச்சரித்து விடுதலை

January 29, 2019 தண்டோரா குழு

இலங்கை கடற்ப்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேரை ஊர்க்காவல் நீதிமன்றம் எச்சரித்து விடுதலை செய்துள்ளது.

இந்திய மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க செல்லும்போதும், தங்கள் பாரம்பரிய மீன்பிடி பகுதிகளில் மீன்பிடிக்கும்போதும் அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்கின்றனர். இந்நிலையில் ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேர் நேற்று முன்தினம் இரவு நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்து அழைத்து சென்றனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்கள் இன்று இலங்கை ஊர்க்காவல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி, இலங்கை கடற்பகுதியில் அத்துமீறி நுழைந்தால் 2 ஆண்டு சிறைதண்டனை விதிக்கப்படும் என எச்சரித்து விடுதலை செய்துள்ளார்.

மேலும் படிக்க