January 29, 2019
தண்டோரா குழு
தேர்வு நெருங்கும் வேளையில் நாளைய நம்பிக்கையாம் மாணவர்களின் கல்வியை காப்பது நமது கடமை என கமல்ஹாசன் ட்வீட் செய்துள்ளார்.
9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் இன்று கடந்த 22ம் தேதியில் இருந்து காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள், அலுவர்களை மீண்டும் பணிக்கு அனுப்ப ஏராளமான முயற்சிகளை எடுத்து வருகிறது.
இதுமட்டுமின்றி போராட்டத்தில் ஈடுபட்ட பலரையும் போலீசார் கைது செய்து வருகிறனர். இந்நிலையில், தேர்வு நெருங்கும் வேளையில் நாளைய நம்பிக்கையாம்
மாணவர்களின் கல்வியை காப்பது நமது கடமை என கமல்ஹாசன் ட்வீட் செய்துள்ளார்.
இது குறித்து கமல் தனது டுவிட்டர் பக்கத்தில்,
கல்வியாளர்களை காப்பது அரசின் கடமை. கல்வியை காப்பது கல்வியாளர்களின் கடமை. அரசு கடமை தவறினாலும் ஆசிரியர் கடமை தவறலாகாது. தேர்வு நெருங்கும் வேளையில் நாளைய நம்பிக்கையாம் மாணவர்களின் கல்வியை காப்பது நமது கடமை. பேச்சு வார்த்தைகள் உரிமைக்காய் தொடருட்டும். கல்விச்சாலைகள் கடமைக்காய் திறக்கட்டும். எட்டு கோடித்தமிழர்களின் உணர்வுகளின் சார்பாய் இதுவே என் குரல் என பதிவிட்டுள்ளார்.