• Download mobile app
16 Jun 2025, MondayEdition - 3414
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஓமன் நாட்டில் வீட்டு வேலைக்கு சென்ற தனது தாயை கொடுமைப்படுத்துவதாக மகன் ஆட்சியரிடம் புகார்

January 29, 2019 தண்டோரா குழு

ஓமன் நாட்டில் வீட்டு வேலைக்கு சென்ற தனது தாயை ஏஜென்சியனர் அடித்து சித்ரவதை செய்து அவரை இந்தியாவிற்கு வர முடியாத படி கட்டாயப்படுத்தி வேலை வாங்குவதால் தனது தாயை மீட்டு தரக்கோரி மகன் கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார்.

கோவை புலியகுளம் பகுதியில் உள்ள அம்மன்குளத்தை சேர்ந்த நாகராஜின் மனைவி சாமுண்டீஸ்வரி 43. இவர் பொள்ளாச்சியை சேர்ந்த அஸ்லாம்கான் என்பவரின் மூலம் டூரிஸ்ட் விசாவில் வீட்டு வேலைக்காக ஓமன் நாட்டிற்க்கு சென்றுள்ளார். அஸ்லாம்கான் சாமுண்டீஸ்வரியை வேலைக்கு அனுப்ப ஓமன் நாட்டில் உள்ள ஏஜென்ஸியிடம் 1லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் வாங்கியுள்ளார்.

இந்நிலையில் ஓமன் நாட்டில் உள்ள ஏஜென்ஸியினர் தன்னை அடித்து கொடுமைப்படுத்துவதாக தனது மகன் விக்னேஸிடம் சாமுண்டீஸ்வரி அழைபேசியில் கண்ணீருடன் தெரிவித்துள்ளார். இதனால் தனது தாயாரை ஓமன் நாட்டில் இருந்து மீட்டு தருமாறு அவரது மகன் விக்னேஷ் கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார்.

இது குறித்து சாமுண்டீஸ்வரியின் உறவினர் சித்ரா கூறுகையில்,

என் அத்தையை வீட்டுக்கு வேலைக்காக அழைத்து சென்ற ஏஜென்சியினர் உணவு கொடுக்காமல்,அடித்து சித்ரவதை படுத்தி வருகின்றனர். அதேபோல் அவரிடம் இருந்த செல்போனையும் பறித்து வைத்துள்ளனர். இதனால் அவரின் நிலைமை கேள்விகுறியாக உள்ளது. ஆகவே அவரை உடனடியாக ஓமனில் இருந்து மீட்க்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க