• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை வால்பாறையில் கொஞ்சி விளையாடிய காட்டு யானைகள் !

January 25, 2019 தண்டோரா குழு

கோவை வால்பாறை புதுத்தோட்டம் அருகே ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள் சண்டையிட்டு கொஞ்சி விளையாடியதை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர்.

நேற்று மாலை கோவை மாவட்ட வால்பாறை புதுதோட்டம் அருகே 5 காட்டு யானைகள் குட்டியுடன் முகாமிட்டது. இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். அப்போது காட்டு யானைகளை மீண்டும் வனபகுதியில் விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.

இதனிடையே காட்டு யானைகளில் இரண்டு இளம் ஆண் யானைகள் சண்டையிட்டு கொஞ்சி விளையாடி கொண்டிருந்ததை அங்கு கூடியிருந்த பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டனர். இதனால் யானைகளை விரட்டும் முயற்சியை விட்டு நீண்ட நேரம் அமைதியாக பார்த்தனர். வாலை பிடித்து இழுத்தும் , கொம்புகளால் முட்டிக்கொண்டும், தந்தத்தை சுற்றியும் விளையாடின. பின்னர் வனத்துறையினர் யானைகளை காட்டிற்குள் விரட்டினர்.

மேலும் படிக்க