• Download mobile app
09 Sep 2026, WednesdayEdition - 3864
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இளம் கலைஞர்களுக்கு பயிற்சி அளிக்க முடிவு – ஏ.ஆர்.ரகுமான்

January 17, 2019 தண்டோரா குழு

வளர்ந்துவரும் இளம் இசைக்கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் மியூஸிக் லவுன்ஜ் என்ற பாடல் தளம் அமைந்துள்ளது. இதில் பாடல்களை பதிவு செய்துகொண்டு ஆன்லைனில் கேட்கலாம். மாருதி சுசூக்கி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள நெக்ஸா மியூஸிக் தளத்தில் இளம்பாடகர்கள் தங்கள் பாடல், வரிகள், பின்னணி இசை ஆகியவற்றை பதிவேற்றிக்கொள்ளலாம். இதற்கு இசை பிரியர்கள் வரவேற்கப்படுகின்றார்கள்.

இவர்களுள் தேர்வானவர்களுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் இசைக் கலைஞர் கிளிண்டன் செரேஜியோ ஆகியோர் பயிற்சி அளிக்க உள்ளனர். ஏ.ஆர்.ரகுமானின் Qyuki Digital Media நிறுவனம் நெக்ஸாவுடன் சேர்ந்து இந்த போட்டியை நடத்த உள்ளது. இளம் இசையமைப்பாளர்கள் தாங்கள் இசையமைத்த டியூனை நெக்ஸாவில் பதிவிடவேண்டும். அவற்றிலிருந்து 24 டியூன்கள் தேர்வு செய்யப்படும். அதன் இசையமைப்பாளர்களுக்கு ரகுமான் தலைமையில் பயிற்சி அளிக்கப்படும். அவர்களுள் 4 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு ரகுமானுடன் மேடை இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள வாய்ப்பளிக்கப்படும்.

இதுகுறித்து ரகுமான் பேசுகையில்,

நெக்ஸா மியூஸிக் லாவுஞ்ச் மூலமாக திறமையான இளம் கலைஞர்கள் புகழ்பெற்ற இசை பேண்ட்களுடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு கிடைக்கும். இதனுடன் எனது நிறுவனம் இணைத்து செயல்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

மேலும் படிக்க