• Download mobile app
08 May 2024, WednesdayEdition - 3010
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இளம் கலைஞர்களுக்கு பயிற்சி அளிக்க முடிவு – ஏ.ஆர்.ரகுமான்

January 17, 2019 தண்டோரா குழு

வளர்ந்துவரும் இளம் இசைக்கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் மியூஸிக் லவுன்ஜ் என்ற பாடல் தளம் அமைந்துள்ளது. இதில் பாடல்களை பதிவு செய்துகொண்டு ஆன்லைனில் கேட்கலாம். மாருதி சுசூக்கி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள நெக்ஸா மியூஸிக் தளத்தில் இளம்பாடகர்கள் தங்கள் பாடல், வரிகள், பின்னணி இசை ஆகியவற்றை பதிவேற்றிக்கொள்ளலாம். இதற்கு இசை பிரியர்கள் வரவேற்கப்படுகின்றார்கள்.

இவர்களுள் தேர்வானவர்களுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் இசைக் கலைஞர் கிளிண்டன் செரேஜியோ ஆகியோர் பயிற்சி அளிக்க உள்ளனர். ஏ.ஆர்.ரகுமானின் Qyuki Digital Media நிறுவனம் நெக்ஸாவுடன் சேர்ந்து இந்த போட்டியை நடத்த உள்ளது. இளம் இசையமைப்பாளர்கள் தாங்கள் இசையமைத்த டியூனை நெக்ஸாவில் பதிவிடவேண்டும். அவற்றிலிருந்து 24 டியூன்கள் தேர்வு செய்யப்படும். அதன் இசையமைப்பாளர்களுக்கு ரகுமான் தலைமையில் பயிற்சி அளிக்கப்படும். அவர்களுள் 4 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு ரகுமானுடன் மேடை இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள வாய்ப்பளிக்கப்படும்.

இதுகுறித்து ரகுமான் பேசுகையில்,

நெக்ஸா மியூஸிக் லாவுஞ்ச் மூலமாக திறமையான இளம் கலைஞர்கள் புகழ்பெற்ற இசை பேண்ட்களுடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு கிடைக்கும். இதனுடன் எனது நிறுவனம் இணைத்து செயல்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

மேலும் படிக்க