• Download mobile app
05 May 2025, MondayEdition - 3372
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

முழுஅடைப்புக்கு திரையுலகினர் ஆதரவு: நாளை படப்பிடிப்புகள் ரத்து

September 15, 2016 தண்டோரா குழு

தமிழகத்தில் நாளை நடைபெறவுள்ள முழுஅடைப்புக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் நாளை படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படும் என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் தாணு அறிவித்துள்ளார்.

காவரி விவகாரத்தில் கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவதை கண்டித்து நாளை நடைபெறவுள்ள முழு அடைப்பு போராட்டத்தில் திரைப்படத்துறையினர் பங்கேற்பார்கள் என்று திரைப்படக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.இது தொடர்பாக திரைப்படக் கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையில், கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவதற்கு கண்டனம் தெரிவித்து நாளை நடைபெறும் போராட்டத்தில் ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமும் கலந்துகொள்ளும்.

இதற்காக, எங்கள் திரையுலகம் சார்பில் திரைப்பட படப்பிடிப்புகள், பாடல் பதிவு, டப்பிங், எடிட்டிங் உள்ளிட்ட அனைத்து பணிகளும் நடைபெறாது.மேலும், திரையரங்குகளில் காலை முதல் மாலை வரை காட்சிகள் ரத்து செய்யப்படும் என தமிழ் திரைபடத்துறையின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

மேலும் படிக்க