• Download mobile app
23 May 2025, FridayEdition - 3390
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

காதலியை மணந்த இந்திய கிரிக்கெட் அணி வீரர் !

December 22, 2018 தண்டோரா குழு

இந்திய கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன் சஞ்சு சேம்சன், தனது நீண்ட நாள் காதலியான சாரு நாயரை இன்று திருமணம் செய்து கொண்டார்.

கேரளாவை சேர்ந்தவர் சஞ்சு சேம்சன். தனது 19வது வயதில் ஐபிஎலில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடினார். தனது அதிரடியான ஆட்டத்தால் ரசிகர்களை கவர்ந்த இவர் IPL-லில் அரைசதம் அடிக்கும் மிக இளம் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். பின்னர் தனது 21வது வயதில் இந்திய கிரிக்கெட் அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதற்கிடையில், கல்லூரியில் இளங்கலை பயிலும் போது இவருக்கும் சாரு நாயர் என்பருக்கும் காதல் மலர்ந்தது. இதையடுத்து நீண்ட நாள் காதலியான சாரு நாயரை, சேம்சன் இன்று திருமணம் செய்து கொண்டார். இந்து மதத்தை சேர்ந்த சாருவும், கிறிஸ்தவரான சேம்சனும், சிறப்பு திருமண சட்டத்தின் படி இன்று மணம் முடித்தனர். திருவனந்தபுரத்தின் கோவளம் பகுதியில் உள்ள ஒரு ரிசார்ட்டில் இரண்டு வீட்டாரின் சம்மதத்தோடு இவர்களது திருமணம் நடைபெற்றது. இரண்டு குடும்பத்தை சேர்ந்த 30 பேர் மட்டுமே கலந்து கொண்டதாக சேம்சன் தெரிவித்தார்.

மேலும் படிக்க