• Download mobile app
11 Jun 2026, ThursdayEdition - 3774
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கிறிஸ் கெய்லுக்கு 1.55 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க ஆஸ்திரேலிய உச்ச நீதிமன்றம் உத்தரவு !

December 4, 2018 தண்டோரா குழு

தவறாக செய்தி வெளியிட்ட வழக்கில் பேர்ஃபாக்ஸ் பத்திரிகை நிறுவனம் சார்பாக கிறிஸ் கெய்லுக்கு 1.55 கோடி இழப்பிடு வழங்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2015 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியா – நியூசிலாந்து நாட்டில் நடைபெற்றது. அப்போது வெஸ்ட் இண்டீஸ் அணியின் கிறிஸ் கெய்ல் தங்கியிருந்த ஹோட்டல் அறையில் மசாஜ் செய்யும் பெண் சென்றதாகவும், அவரிடம் கெய்ல் தவறாக நடந்ததாகவும், கெயல் குறித்து ஆஸ்திரேலியாவின் பேர்ஃபாக்ஸ் பத்திரிகை நிறுவனம் செய்தியை வெளியிட்டது.

இந்த சம்பவம் குறித்து கிறிஸ் கெய்ல் மறுப்பு தெரிவித்திருந்தார். மேலும் தன்னை குறித்து தவறான செய்தி வெளியிடப்பட்டுள்ளது. தனது கிரிக்கெட் வாழ்க்கையை உருக்குலைக்க ஆஸ்திரேலியா செய்தியாளர்கள் சிலர் செய்த சதி இது. தனது பெயர், புகழுக்கு kaகழங்கம் ஏற்படுத்தும் விதமாக வெளியிட்ட செய்தி நிறுவனம் மீது நடவடிக்கையும் மற்றும் இழப்பீடும் வழங்க வேண்டும் என்று கெய்ல் சார்பாக மான நஷ்டஈடு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கடந்த அக்டோபர் மாதம் கெய்லுக்கு சாதகமாக தீர்ப்பு வெளியானது.

மேலும் இந்த வழக்கின நஷ்டஈடு விவரம் மற்றும் தீர்ப்பு சமீபத்தில் வெளியானது அதில், கிறிஸ் கெய்ல் மீதான வழக்கில், எந்த ஆதாரமும் இல்லை, செய்தி நிறுவனத்தால் நிரூபணமும் செய்ய முடியாததால், கெய்லுக்கு ரூ. 1 கோடியே 55 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என ஆஸ்திரேலியாவின் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க