• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

டெல்டா மக்களுக்கு உதவுவதற்காக சிம்பு சொன்ன ஐடியா!

November 21, 2018 தண்டோரா குழு

டெல்டா மக்களுக்கு உதவுவதற்காக நடிகர் சிம்பு வீடியோ ஒன்றின் மூலமாக ஐடியா ஒன்றை கொடுத்துள்ளார்.

கடந்த 16-ந்தேதி ‘கஜா’ புயல் தமிழகத்தை தாக்கியதில்,நாகப்பட்டினம்,திருவாரூர்,தஞ்சாவூர்,புதுக்கோட்டை,ராமநாதபுரம்,கடலூர்,திண்டுக்கல்,சிவகங்கை,கரூர், திருச்சி உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டது.இந்த புயலால் அப்பகுதி மக்கள் தங்களது உடைமைகளை இழந்து தவித்து வருகின்றனர். இதனால் மக்கள் திரையுலக பிரபலங்கள்,இளைஞர்கள்,தன்னார்வல தொண்டர்கள் என பலர் உதவி வருகின்றனர்.இந்நிலையில்,நடிகர் சிம்பு டெல்டா மக்களுக்கு உதவுவதற்காக நடிகர் சிம்பு வீடியோ ஒன்றின் மூலமாக ஐடியா ஒன்றை கொடுத்துள்ளார்.

அந்த வீடியோவில்,

“டெல்டா விவசாயிகள் நிலையை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது.என்னால் முடிந்த உதவியை நான் செய்து விடுவேன்.என்னுடைய ரசிகர்களும் உதவி செய்து வருகிறார்கள்.நாம் எல்லோரும் அவர்களுக்கு உதவ நினைத்தாலும் நாம் செய்யக்கூடிய உதவி அவர்களை போய் சென்றடைகிறதா? அதன் மூலம் அவர்களை பலனடைந்தார்களா என்பது கேள்வி குறியாகவே உள்ளது.சாதாரண பரம மக்கள் உதவி செய்ய வேண்டும் என்று நினைத்தால் அவர்களால் கொண்டு சென்று குடுக்க முடியாத ஒரு சூழல் ஏற்படுகிறது.நாம் அனைவரும் செல்போன் பயன்படுத்துகிறோம்.அனைவரும் பயன்படுத்தும் தொலைத்தொடர்பு நெட் ஒர்க்கின் மூலமாக ரூ 10 முதல் ரூ 100 வரை வழி வகை செய்ய வேண்டும்.அதற்காக தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஒன்றிணைய வேண்டும்.அதன் மூலம் மக்கள் அனுப்பிய தொகையை அரசுக்கு அளித்து அவர்கள் டெல்டா மாவட்ட மக்களுக்கு உதவி வேண்டும்.இந்த பணத்தால் செய்த செலவுகளையும்பட்டியலிட்டு அரசு வெளியிட வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க