• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

டெல்டா மாவட்டங்களில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு -வானிலை ஆய்வு மையம்

November 19, 2018 தண்டோரா குழு

டெல்டா மாவட்டங்களில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,

“நேற்று தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் மையம் கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது தென் மேற்குவங்க கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது.நாளைமேற்கு நோக்கி நகர்ந்து தமிழகம் மற்றும் புதுச்சேரி அருகே நிலைபெறும்.இதன் காரணமாக,இன்று மாலை முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்.நாகை,திருவாரூர்,தஞ்சை, புதுக்கோட்டை,சிவகங்கை,கடலூர்,ராமநாதபுரம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருக்கிறது.நாளை மற்றும் நாளை மறுநாள் உள்மாவட்டங்களிலும் மழைபெய்ய வாய்ப்பிருக்கிறது.சென்னையை பொறுத்தவரை லேசானது முதல் மிதமான மழைபெய்ய வாய்ப்பிருக்கிறது.மீனவர்கள் 20,21ம் தேதிகளில் கடலுக்கு செல்ல வேண்டாம்.கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் குன்னூரில் 7 செ.மீ.,கோவை மாவட்டம்,மேட்டுபாளையத்தில் 6 செ.மீ., மழை பெய்துள்ளது”.இவ்வாறு கூறினார்.

மேலும் படிக்க