November 12, 2018
தண்டோரா குழு
ஜார்கண்ட்டில் பள்ளி செல்லும் சிறுவர் – சிறுமியர் நக்ஸல்களிடம் இருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ள புத்தகப் பையோடு சேர்த்து வில் – அம்பையும் உடன் எடுத்து செல்கின்றனர்.
ஜார்கண்ட் மாநிலத்தில் நக்ஸல்கள் நிறைந்த பகுதிகளில் மாணவர்கள் பள்ளிக்கு செல்வது மிகவும் சிரமமான ஒன்றாக இருந்து வருகிறது.சக்குலியா (Chakulia) நகரை அடுத்த போச்பானி (Pochpani) கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் புத்தகப் பையுடன் கூடுதலாக வில்லையும் அம்பையும் எடுத்துச் செல்கின்றனர்.சிறுவர் சிறுமியர் வனப்பகுதியை கடந்து பள்ளிக்குச் செல்ல வேண்டியிருப்பதாகவும் அப்போது மாவோயிஸ்டுகளிடம் இருந்து தங்களை காத்துக்கொள்ளவும் தாக்குதலுக்கும் வில்லையும் அம்பையும் எடுத்து செல்லவதாக பள்ளி மாணவர்கள் கூறியுள்ளனர்.