• Download mobile app
19 Jun 2025, ThursdayEdition - 3417
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அசாம் அரசு மருத்துவமனையில் பெரும் சோகம் – 6 நாட்களில் 15 பிஞ்சு குழந்தைகள் உயிரிழப்பு!

November 10, 2018 தண்டோரா குழு

அசாம் மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 15 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்து இருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அசாம் மாநிலம் ஜோர்ஹட் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த 6 நாட்களில் பிறந்த குழந்தைகளை பராமரிக்கும் சிறப்பு சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட பிறந்து சில தினங்களே ஆனா 15 பச்சிளம் குழந்தைகள் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்து உள்ளன. இச்சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில், குழந்தைகள் உயிரிழப்புகள் மருத்துவமனையின் அலட்சியத்தால் ஏற்படவில்லை என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும், சில நேரங்களில் மருத்துமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிக அளவில் இருப்பதாலும், இதனால் எளிதில் நோய் தோற்று பரவக்கூடியதால் நோய் தோற்று உருவாகி சில குழந்தைகள் இறந்து இருக்கலாம். மோசமான உடல்நிலையுடன் பிறந்ததே, சில குழந்தைகள் உயிரிழப்புக்கு காரணம். உயிரிழந்த குழந்தைகளில் 10 பேர் பிறக்கும்போதே குறைவான எடையுடன் பிறந்துள்ளனர். மற்ற மூன்று குழந்தைகள் இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்ததனர். சில கர்ப்பிணிகள் காலங்கடந்து மருத்துவமனைக்கு வந்ததும், குழந்தைகள் உயிரிழப்புக்கு காரணம் என மருத்துவமனை நிர்வாகி ஒருவர் கூறியுள்ளார்.
மேலும் மாநில சுகாதாரத்துறை இதுகுறித்து விசாரிக்க உத்திரவிட்டுள்ளது. அதைபோல் அம்மருத்துவமனை நிர்வாகம் தரப்பிலும் 6 பேர் கொண்ட குழுவை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரசு மருத்துவமனையில் 6 நாட்களில் 15 பிச்சிளம் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க