November 3, 2018
தண்டோரா குழு
சென்னையில் தனியார் பள்ளி ஆசிரியை மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 12 வகுப்பு மாணவன் தரப்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னையை அடுத்த முகப்பேரில் இயங்கிவரும் பிரபல தனியார் பள்ளியில், மாங்காடு பகுதியை சேர்ந்த 17 வயது மாணவன் படித்து வருகிறான். அம்மாணவனுக்கு அப்பள்ளியை சேர்ந்த 40 வயதான ஸ்மிதா என்ற கணினி ஆசிரியை பள்ளியிலேயே தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து, மாணவனின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில், ஆசிரியை ஸ்மிதாவை, பள்ளி நிர்வாகம் பணி நீக்கம் செய்துள்ளது.
எனினும், அந்த மாணவனுக்கு அந்த ஆசிரியை தொலைபேசி மூலம் ஆபாசமாக பேசி தொல்லை கொடுத்துள்ளார். இந்நிலையில், மாணவனின் பெற்றோர் நொளம்பூர் காவல் நிலையத்தில், கணினி ஆசிரியை ஸ்மிதா மீது புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.