• Download mobile app
04 Jul 2025, FridayEdition - 3432
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்களின் கண்காட்சியில் ரூ.2 கோடி வர்த்தகம்

October 19, 2018 தண்டோரா குழு

கோவையில் 3 நாட்கள் நடைபெற்ற விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்களின் கண்காட்சியில் ரூ.2 கோடி வர்த்தகமானதாக மண்டல ஜவுளி ஆணையர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மத்திய ஜவுளி அமைச்சகம் சார்பில் விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்களின் வாங்குவோர்-விற்பனையாளர் கண்காட்சி கடந்த 15ம் தேதி துவங்கியது.கடந்த 3 நாட்கள் நடைபெற்ற இந்த கண்காட்சியில் தமிழ்நாடு,ஆந்திரா, கர்நாடக ஆகிய மாநிலங்களை சேர்ந்த விசைத்தறி துணி உற்பத்தியாளர்கள் பங்கேற்றனர்.28 அரங்குகளில் விசைத்தறியிலான சர்டிங்,சூட்டிங்,சேலைகள்,சுடிதார்,வேட்டிகள்,லுங்கிகள்,துண்டுகள்,திரைச்சீலைகள்,பள்ளி சீருடைகள்,வீட்டிற்கு தேவையான ஜவுளி என 100க்கும் மேற்பட்ட ஜவுளி ரகங்கள் விற்பனைப்படுத்தப்பட்டன.

ஜவுளி உற்பத்தியாளர்களுடன் ஜவுளி வியாபாரிகள்,ஏற்றுமதியாளர்கள்,மொத்தமாக வாங்குபவர்கள் நேரடி சந்திப்பு ஏற்படுத்தி தங்களின் தொழிலை மேம்படுத்தி வருவாயை அதிகப்படுத்தும் வகையில் இந்த கண்காட்சி அமைக்கப்பட்டது.

மத்திய ஜவுளி அமைச்சகத்தின் விசைத்தறி வளர்ச்சி மற்றும் ஏற்றுமதி அபிவிருத்திக் கழகத்தின் திட்டத்தில் விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு அரங்குகள் இலவசமாக வழங்கப்பட்டதால்,சிறு,குறு தொழில் முனைவோர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருந்ததாக கூறுகின்றனர்.

மேலும்,கண்காட்சியில் ஒரு பகுதியாக கோவை,திருப்பூர்,ஈரோடு ஆகிய மாவட்டங்களில் ஜவுளித்துறையில் பயிலும் மாணவர்களுக்கு விசைத்தறியில் தொழில்முனைவோர்களாவது தொழில் துவங்குவது,புதிய கண்டுபிடிப்புகள்,பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம்,அரசின் திட்டங்கள் ஆகியவை குறித்து பயிற்சியும் வழங்கப்பட்டது.

மேலும் படிக்க