• Download mobile app
26 Feb 2026, ThursdayEdition - 3669
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மீண்டும் இணையும் சிம்பு -கௌதம் மேனன்- ஏ.ஆர் ரஹ்மான் கூட்டணி !

October 17, 2018 தண்டோரா குழு

கடந்த 2010ம் ஆண்டு கௌதம் மேனனின் இயக்கத்தில் சிம்பு,த்ரிஷா நடிப்பில் வெளிவந்த படம் விண்ணைத்தாண்டி வருவாயா.மாபெரும் வெற்றி பெற்ற இப்படம் சிம்புவின் திரை பயணத்தில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது.

இப்படத்திற்கு பின் சிம்பு கெளதம் மேனன் கூட்டணி அஞ்சம் என்பது மடமையடா படத்திற்காக மீண்டும் இணைந்தது.இவ்விரு படங்களுக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.இதற்கிடையில்,இப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கவுள்ளதாக இயக்குநர் கௌதம் மேனன் தெரிவித்துள்ளார்.

விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தொடர்ச்சியாகவே இப்படம் இருக்குமாம்,அதாவது கார்த்திக் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பது தான் படத்தின் கதையாம்.எனினும் இதுகுறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

மணிரத்னத்தின் செக்க சிவந்த வானம் படத்திற்கு பின் சிம்பு தற்போது சுந்தர் சி இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து சிம்பு வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது.

இந்நிலையில்,அண்மையில் சிம்பு இயக்குநர் கெளதம் மேனன்,ஏ.ஆர்.ரஹ்மான் மூவரும் சந்தித்து செல்பி எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.இதனால்,சிம்பு – இயக்குநர் கெளதம் மேனன் – ஏ.ஆர். ரஹ்மான் கூட்டணி மீண்டும் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.எனினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க