• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அம்மா உணவகங்களில் தரமற்ற உணவு வழங்கினால் நடவடிக்கை – எஸ்.பி. வேலுமணி

October 15, 2018 தண்டோரா குழு

அம்மா உணவகங்களில் தரமற்ற உணவு வழங்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி எச்சரித்துள்ளார்.

தமிழகத்தில் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது,அடித்தட்டு மக்களுக்கு குறைந்த விலையில் உணவு வழங்குவதற்காக அம்மா உணவகம் திட்டம் தொடங்கப்பட்டது.இங்கு உணவுகள் தரமாகவும் சுவையாகவும் இருப்பதுடன்,விலை குறைவாகவும் கிடைத்ததால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. இதற்கிடையில் சமீப காலமாக அம்மா உணவகங்களில் தரம் குறைந்த உணவுகள் வழங்கப்படுவதாக புகார் எழுந்தது. இதனால், அம்மா உணவகங்களில் கூட்டமும் குறையத் தொடங்கியது.

இந்நிலையில்,சென்னை எழும்பூரில் உள்ள அம்மா உணவகத்துக்கு அதிகாரிகளுடன் சென்ற அவர்,திடீர் ஆய்வு நடத்தினார்.அங்கு சமையல் கூடத்தில் உணவு தயாரிக்கும் முறை,சமையலுக்கான பாத்திரங்கள் மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை ஆய்வு செய்தார்.பின்னர் தரமான உணவுகளை வழங்கும்படி ஊழியர்களுக்கு அறிவுறுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எஸ்.பி வேலுமணி,

“தமிழகம் முழுவதும் அம்மா உணவகங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.முதல்வரின் ஒப்புதல் கிடைத்ததும் உணவகங்கள் அதிகரிக்கப்படும்.அம்மா உணவகங்களில் தரம் குறைந்த உணவுகளை விநியோகம் செய்தால் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.மேலும்,அம்மா உணவகங்கள் மூடப்பட்டு வருவதாக வெளியாகும் தகவல்கள் முற்றிலும் தவறானவை”.இவ்வாறு பேசினார்.

மேலும் படிக்க