• Download mobile app
18 Jun 2026, ThursdayEdition - 3781
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உலகிலேயே மிக அதிக விலையிலான ஷு இது தான் !

September 27, 2018 தண்டோரா குழு

உலகிலேயே மிக அதிக விலையிலான தங்கம் மற்றும் வைரக்கற்களால் தயாரான ஷு துபாயில் தயாரிக்கப்பட்டுள்ளது.”என்ன தான் தங்கத்தில் செருப்பு செஞ்சாலும் அத கால்ல தான் போட முடியும் தலைல தூக்கி வைக்க முடியாதுனு “ நாம பழமொழி கேட்டிருப்போம்.ஆனால் அந்த பழமொழியை நிஜமாக்கும் வகையில் ஐக்கிய அரபு நாடான துபாயில் தங்க ஷூ தயாரிக்கப்பட்டுள்ளது.இந்த ஷுவை ஜெட்டா துபாய் நிறுவனமும்,பாசியன் ஜுவல்லரியும் இணைந்து தயாரித்துள்ளன.

இது தான் உலகின் மிக விலை உயர்ந்த,ஆடம்பர ஷூ எனக் கூறப்படுகிறது.ஏனெனில் 100-க்கும் அதிகமான 15 காரட் வைரக்கற்களையும்,தங்க கட்டிகளையும் பயன்படுத்தி தயார் செய்யப்பட்ட இந்த ‘ஷு’ க்களின் மதிப்பு ரூ.123 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.இதனை முழுமையாக வடிவமைத்து தயாரிக்க 9 மாத காலம் ஆனதாக தயாரிப்பு நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும்,தற்பொழுது காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் இந்த காலணியின் அளவு ஐரோப்பிய அளவில் 36 எனவும்,காலணியை வாங்குபவர்களுக்கு தக்கவாறு அளவு மாற்றப்படும் எனவும் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க