• Download mobile app
05 Aug 2026, WednesdayEdition - 3829
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி துப்புரவு பணியாளர்கள் பேரணி

September 26, 2018 தண்டோரா குழு

குறைந்த பட்ச ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாநகராட்சியில் பணிபுரியும் 5௦௦க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் பேரணியாக சென்றனர்.

கோவை மாநகராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு அரசானை 62ன் படி குறைந்த பட்ச ஊதியம் வழங்க வேண்டும், மேலும் சம்பளத்துடன் கூடிய வார விடுமுறை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி துப்புரவு பணியாளர்கள் கோவை மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி முதல் வ.உ.சி பூங்கா வரை பேரணியாக சென்றனர்.

இந்த பேரணியில் பெண்கள் உட்பட 500 க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.480 நாட்கள் பணிபுரிந்த அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என மாநகராட்சிக்கு கோரிக்கை வைத்தனர்.மேலும்,கோவை மாநகராட்சியில் தினக்கூலி பணியாளர் அனைவருக்கும் சட்டப்படியான போனஸ் வழங்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.இந்த பேரணியில் பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க