• Download mobile app
05 Jul 2025, SaturdayEdition - 3433
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தி நிறுவனம் அதிக வருமானம் ஈட்டி சாதனை

September 26, 2018 தண்டோரா குழு

ஈஷா அறக்கட்டளையின் வழிகாட்டுதலின் படி செயல்பட்டு வரும் வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தி நிறுவனம் கடந்த நிதியாண்டில் மட்டும் ரூ.7.91 கோடி வருமானம் ஈட்டி சாதனை படைத்து உள்ளதாக அந்நிறுவனத்தை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

கோவையில் உள்ள வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தி நிறுவனம் கடந்த 2013 ஆம் ஆண்டில் துவங்கப்பட்டது.இந்த நிறுவனத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர்.இந்த விவசாயிகள் தென்னை,பாக்கு,வாழை,காய்கறிகள் உள்ளிட்ட விவசாய பொருட்களை உற்பத்தி செய்து லாபம் ஈட்டி வருகின்றனர்.

இதில் இடைத்தரகர்கள் நீங்கி,விற்பனையான விளைப்பொருட்களுக்கான பணம் விவசாயிகளின் வங்கி கணக்குகளுக்கு நேரடியாக உடனுடக்குடன் அனுப்பப்படுகிறது.இந்நிலையில் இந்த வருடத்திற்கான ஆண்டு பொதுக்குழு கூட்டம் கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் நடைபெற்றது.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அந்நிறுவனத்தை சேர்ந்த உறுப்பினர்கள்,

“இந்த உற்பத்தி நிறுவனத்தின் மூலமாக இந்த நிதியாண்டில் மட்டும் ரூ.7.91கோடி வருமானம் ஈட்டி சாதனை படைத்து உள்ளதாக தெரிவித்தனர்.இந்த வேளாண் நிறுவனத்தின் மூலமாக,விவசாயிகளுக்கு பயிற்சி அளிப்பது,மத்திய மாநில அரசுகளின் திட்டங்களை விவசாயிகள் மத்தியில் கொண்டு சேர்ப்பது உள்ளிட்ட பணிகளை ஈஷா அறக்கட்டளை மூலம் செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.மேலும் சந்தை நிலவரப்படி விவசாயிகளுக்கு அதிக லாபம் கிடைக்கும் வகையில் விற்பனை செய்வது போன்ற வழிமுறைகளை அளிப்பதாகவும் தெரிவித்தனர்.இதனால் இந்த நிறுவனம் தமிழகத்தில் சிறந்த உழவன் உற்பத்தி நிறுவனமாக உள்ளதாகவும் கூறினர்”.

மேலும் படிக்க