• Download mobile app
03 May 2026, SundayEdition - 3735
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு கேல் ரத்னா விருது வழங்கினார் குடியரசு தலைவர்

September 25, 2018 தண்டோரா குழு

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கேல் ரத்னா விருது வழங்கினார்.

இந்திய அரசால் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதாக கருதப்படுவது ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது.கடந்த 1991ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வரும் இவ்விருதை இதுவரை 34 பேர் மட்டுமே பெற்றுள்ளனர்.இதற்கிடையில் 2018 க்கான தேசிய விளையாட்டு விருதுகளை மத்திய அரசு கடந்த சில நாட்களுக்கு முன் அறிவித்தது.இதில்,இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி மற்றும் பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானுவிற்கு கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில்,டெல்லியில் குடியரசுத்தலைவர் மாளிகையில் நடந்த விழாவில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் விராட் கோலி மற்றும் பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானுவிற்கு கேல் ரத்னா விருதை வழங்கினார்.அதைபோல் குத்துச்சண்டை பயிற்சியாளர் சுபேதார்செனந்தா குட்டப்பா,டேபிள் டென்னிஸ் பயிற்சியாளர் சீனிவாச ராவ் தடகள வீரர் வி.ஆர்.பீடு ஆகியோருக்கு துரோணாச்சாரியார் விருதும்,ஈட்டி எறியும் வீரர் நீரஜ் சோப்ரா,ஓட்டப்பந்தய வீரர் ஜின்சன் ஜான்சன்,வீராங்கனை நெலா குர்த்தி,குத்துசண்டை வீரர் சதிஷ்குமார் ஆகியோருக்கு அர்ஜுனா விருதை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.

மேலும் படிக்க