• Download mobile app
03 Nov 2025, MondayEdition - 3554
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இழப்பீடு வழங்கக்கோரி அழுகிய வெங்காயத்துடன் ஆட்சியரிடம் மனு அளித்த கோவை விவசாயிகள்

September 24, 2018 தண்டோரா குழு

சின்ன வெங்காயம் பயிரிட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை வழங்கக்கோரி தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பாக மாவட்ட ஆட்சித்தலைவரிடம் இன்று மனு அளித்தனர்.

கோவை மாவட்டத்தில் தொண்டாமுத்தூர்,ஆலாந்துரை,தீத்திபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சின்ன வெங்காயம் பல ஏக்கரில் பயிரிட்டிருந்தனர்.இந்நிலையில் சின்னவெங்காயத்தை பதப்படுத்த போதுமான கிடங்குகள் இல்லாமல் வெங்காயம் அழுகி விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.மேலும், இருக்கின்ற கிடங்குகள் காற்றோட்டம் இல்லாமல் இருப்பதாக தெரிவித்தனர்.சின்ன வெங்காயம் பயிரிட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை தமிழக அரசு வழங்க வேண்டும் என்றும்,ஏக்கர் ஒன்றுக்கு குறைந்த பட்சம் ஒரு லட்ச ரூபாய் வழங்க வலியுறுத்தி அழுகிய சின்ன வெங்காயத்தை எடுத்து வந்து மாவட்ட ஆட்சித்தலைவரிடம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பாக மனு அளித்தனர்.

மேலும் படிக்க