• Download mobile app
19 Mar 2026, ThursdayEdition - 3690
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

எச்.ராஜா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு

September 24, 2018 தண்டோரா குழு

அதிமுக எம்.பி. அருண்மொழிதேவன் கொடுத்த புகாரின் பேரில் எச்.ராஜா மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது.

பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கடந்த 2ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆலயங்கள் மீட்பு என்ற பெயரில் நடந்த பொதுக்கூட்டத்தில் அதிமுக எம்.பி.அருண்மொழித்தேவன்,திட்டக்குடி குளத்தை ஆக்கிரமித்திருப்பதாக குற்றம்சாட்டியிருந்தார்.

இதனைக்கண்டித்து,ஹெச்.ராஜாவுக்கு எதிராக அதிமுக எம்.பி. அருண்மொழித் தேவன் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். இந்நிலையில்,இப்புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் எச்.ராஜா மீது இரு பிரிவினரிடையே கலகத்தை ஏற்படுத்துவது,பொதுமக்களிடம் தவறான கருத்துக்களை பரப்புவது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் படிக்க