• Download mobile app
19 Mar 2026, ThursdayEdition - 3690
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தற்கொலைக்கு முயன்ற நடிகை நிலானி மீது வழக்கு பதிவு

September 22, 2018 தண்டோரா குழு

மதுரவாயல் அருகே கொசு மருந்து குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்த சின்னத்திரை நடிகை நிலானி மீது போலீசார் தற்கொலைக்கு முயற்சி செய்த பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சின்னத்திரை தொடர்களில் நடித்து வருபவர் நடிகை நிலானி.இவர் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக,காவலர் உடையில் இருந்தவாறு கருத்து தெரிவித்தால் கைது செய்யப்பட்டு,பின்னர் ஜாமீனில் விடுதலையானார்.இதற்கிடையில் இவரைத் திருமணம் செய்ய விரும்பிய உதவி இயக்குநர் காந்தி லலித்குமார்,கடந்த சில தினங்களுக்கு முன்பு கே.கே.நகர் பகுதியில் தீக்குளித்து தற்கொலை செய்துக்கொண்டார்.இதையடுத்து,அவரது தற்கொலைக்கு நிலானி தான் காரணம் என்று செய்திகள் பரவின.

இந்நிலையில்,கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள தனது வீட்டில் நடிகை நிலானி கொசு மருந்து குடித்து தற்கொலை முயற்சி செய்துள்ளார்.மயக்கமடைந்த நிலானியை ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.இதையடுத்து நடிகை நிலானி நலமுடன் உள்ளதாக கூறப்படுகிறது.இந்நிலையில்,கொசு மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றதாக கூறி,அவர் மீது மதுரவாயல் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் படிக்க