• Download mobile app
17 Mar 2026, TuesdayEdition - 3688
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சென்னை செல்லும் நெடுஞ்சாலைகளில் வேகம் அளக்கும் கருவி அமைப்பு. ஓட்டுனர்கள் எச்சரிக்கை.

August 29, 2016 தண்டோரா குழு

சென்னை நோக்கி வரும் அனைத்து வாகனங்களும் அதிவேகமாக வந்து அடிக்கடி விபத்தில் சிக்குவதால் வரும் வாகனங்களின் வேகத்தை அறிந்து அவர்களுக்கு அபராதம் விதிக்க அரசு முடிவெடுத்தது.

இதையடுத்து சென்னை நோக்கி வரும் நெடுஞ்சாலைகளில் பல்வேறு இடங்களில் லேசர் வேகக்கருவி பொருத்தப்பட்டது.கடந்த சில நாட்களாக ஒத்திகை பார்க்கப்பட்ட பின் இன்று முதல் அந்தக் கருவிகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன.

இந்தக் கருவி மூலம் ஒரு வாகனம் 100 கிலோமீட்டர் வேகத்தைத் தாண்டுவது கண்டுபிடிக்கப்பட்டால் 400 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.மீண்டும் அதே தவறை செய்தால் இரண்டாவது முறைக்கு 1,000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் இந்த அபராதங்கள் முழுவதும் வேகத்தைத் தொட்ட இடத்திற்கு அடுத்த சுங்கச்சாவடியில் வசூல் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் சென்னையை நோக்கிச் செல்லும் வாகன ஓட்டிகளும்,அங்கிருந்து வருபவர்களும் மிகவும் எச்சரிக்கையாக வாகனத்தை ஒட்டவேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க