• Download mobile app
18 Jun 2026, ThursdayEdition - 3781
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

முத்தலாக் அவசர சட்டம் என்பது அவசரக்கோலத்தில் நிறைவேற்றப்பட்டது போல் உள்ளது – ஜவாஹிருல்லா

September 20, 2018 தண்டோரா குழு

முத்தலாக் அவசர சட்டம் என்பது அவசரக்கோலத்தில் நிறைவேற்றப்பட்டது போல் உள்ளது என மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

“முத்தலாக் அவசர சட்டம் என்பது அவசரக்கோலத்தில் நிறைவேற்றப்பட்டது போல் உள்ளது.அரசியல் சாசன சட்ட நெறிமுறைகளுக்கு எதிரானது எனவும்,முஸ்ஸீல் பெண்களுக்கு பாதுகாப்பான சட்டமாக இது அமையாது.தலாக் என்பது குறித்த வரையறை குழப்பமாக உள்ளது.இதை எதிர்த்து முஸ்ஸீல் அமைப்புகளுடனும், ஜனநாயக அமைப்புகளுடனும் சேர்ந்து களமாட இருக்கிறோம்.

சமீபத்தில் இந்து இயக்க தலைவர்களை கொலை செய்ய திட்டம் தீட்டியதாக கோவையில் 7 பேரை கைது செய்தது அநீதி ஆகும்.இதுவரை கைது செய்தவர்கள் என்ன தவறு செய்தார்கள் என்பதை காவல்துறையினரால் அறிவிக்க முடியவில்லை.

நீதிமன்றத்தையும்,காவல்துறையையும் மிகக்கடுமையாக விமர்சித்த ஹச்.ராஜா மீது தான் யு.ஏ.பி.எ சட்டத்தை அமல்படுத்தியுருக்க வேண்டும்.தமிழக அமைச்சர்கள் ஊழலில் மூழ்கி திளைக்கிறார்கள்.நேர்மையாக விசாரணை நடக்க வேண்டும் என்றால் இவர்கள் பதவி விலக வேண்டும்.ம.ம.க சார்பாக அக்.7 தேதி திருச்சியில் அரசமைப்பு பாதுகாப்பு மாநாடு நடத்த இருக்கிறோம்”.இவ்வாறு பேசினார்.

மேலும் படிக்க