• Download mobile app
05 Jul 2025, SaturdayEdition - 3433
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இயற்கை முறையில் தயாரிக்கப்படும் பதஞ்சலி ஓட்ஸ் பாக்கெட்டில் பூச்சிகள்..? வாடிக்கையாளர் அதிர்ச்சி..!

September 19, 2018 தண்டோரா குழு

யோகாகுரு பாபா ராம்தேவ் பதஞ்சலி நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்நிறுவனம் இயற்கை முறையில் பலசரக்குகளை, பல்பொருள் அங்காடி, ஆன்லைன் மற்றும் தனி தனியாக ஷோரூம்கள் அமைத்து இந்தியா முழுவதும் விற்பனை செய்து வருகிறது.

அந்நிறுவனத்தின் பொருட்கள் அனைத்தும் முற்றிலும் இயற்கை முறையில் தயாரிக்கப்படுகிறது என்று அடிக்கடி விளம்பரங்களில் கூறப்பட்டாலும் அண்மைக்காலமாக பதஞ்சலி நிறுவனத்தின் பொருட்கள் மீது அடுக்கடுக்கான குற்றசாட்டுகள் வந்து கொண்டு தான் இருக்கின்றன.

இந்நிலையில், பதஞ்சலி நிறுவனத்தின் ஓட்ஸ்யை வாடிக்கையாளர் ஒருவர் வாங்கியுள்ளார். இயற்கை முறையில் தயாரிக்கப்படும் பொருட்கள் என நம்பிவாங்கிய அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில், அவர் அந்த ஓட்ஸ் பாக்கெட்டை திறந்த போது அதில் மாவுப்பூச்சி இருந்துள்ளது. இதனைப் பார்த்து அவர் அதிர்ச்சியடைந்துள்ளார்.
மேலும் இந்த சம்பவம் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த அந்த வாடிக்கையாளர், பதஞ்சலி நிறுவனத்துக்கு எதிராக நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாக கூறியுள்ளார்.

ஏற்கனேவ, பதஞ்சலி நிறுவனம் மீது காலவதி தேதியை தவறாக அச்சடித்த குற்றச்சாட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க