• Download mobile app
18 Dec 2025, ThursdayEdition - 3599
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

திமுகவுக்கு எதிராக வரும் 25ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கண்டன பொதுக்கூட்டம் -முதல்வர் பழனிச்சாமி அறிவிப்பு

September 19, 2018 தண்டோரா குழு

திமுகவுக்கு எதிராக வரும் 25ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கண்டன பொதுக்கூட்டம் நடத்தப்படும் என முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி,துணை முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அவை, தி.மு.க.,விற்கு எதிராக மாவட்ட தலைநகரங்களில் கண்டன பொதுகூட்டம் நடத்தப்படும். இலங்கை தமிழர் படுகொலையில் கூட்டணி அரசாக இருந்த காங்கிரஸ் திமுகைவை தண்டிக்க வேண்டும். இனப்படுகொலையில் சம்பந்தப்பட்டவர்களை போர்க்குற்றவாளிகளாக்கி தண்டிக்கப்பட வேண்டும். இலங்கை ராணுவத்திற்கு தி.மு.க., காங்கிரஸ் உதவியதை ராஜபக்ஷே ஒப்புதல் வாக்குமூலம் தந்துள்ளார். என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் படிக்க