• Download mobile app
20 May 2025, TuesdayEdition - 3387
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோயில் உண்டியல் உடைத்து திருட முயற்சி; தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்!

September 19, 2018 தண்டோரா குழு

கோவை பேரூர் பட்டி விநாயகர் கோவிலில் உண்டியல் உடைத்து திருட முயன்ற மூன்று பேரில் ஒரு இளைஞரை சுற்றி வளைத்து பொது மக்கள் தர்ம அடி கொடுத்து காவல் துறையிடம் ஒப்படைத்தனர்.

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் இருந்து ஆற்றுக்கு செல்லும் வழியில் இடதுபுறமாக பட்டி விநாயகர் கோவில் உள்ளது.ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான இந்தக் கோயிலில் நேற்றிரவு எட்டரை மணியளவில் மூன்று திருடர்கள் பின்பக்க சுவற்றில் ஏறி கோவிலுக்குள் நுழைந்து உண்டியலை உடைத்துள்ளனர்.

அப்போது சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் கோவிலை சுற்றி நின்றுக் கொண்டனர்.இதனையடுத்து கோவிலுக்குள் சென்று பார்த்த போது திருட முயற்சித்த மூன்று பேரில் இருவர் தப்பிவிட,ஒரு இளைஞர் மட்டும் மாட்டிக்கொண்டார்.இதனையடுத்து திருடனை பிடித்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து பேரூர் காவல் துறையிடம் ஒப்படைத்தனர்.மேலும்,காவல் துறையினர் தப்பியோடிய இருவர் குறித்து விசாரிக்காமல்,இரவு எட்டரை மணியளவில் எப்படி திருட வருவான் என அலட்சியமாக கூறுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினார்.

மேலும் படிக்க