• Download mobile app
18 Jun 2026, ThursdayEdition - 3781
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நிலவிற்கு சுற்றுலா செல்லும் முதல் பயணி!

September 18, 2018 தண்டோரா குழு

அமெரிக்க தனியார் விண்வெளி நிறுவனத்தின் மூலம் நிலவிற்கு பயணம் செல்லவுள்ள முதலாவது நபர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.வாழ்வில் ஒரு முறையாவது உலகின் அனைத்து இடங்களுக்கும் சுற்றுலா செல்ல வேண்டும் என்ற ஆசை பலருக்கும் உண்டு.இந்த ஆசையை மூலதனமாக வைத்து,ஸ்பேஸ் எக்ஸ் என்ற தனியார் விண்வெளி நிறுவனம்,2023ம் ஆண்டு சந்திரனுக்கு சுற்றுலா பயணிகளை அழைத்து செல்ல முடிவு செய்துள்ளது.

இந்நிலையில்,நிலவுக்கு சுற்றுலாப்பயணம் மேற்கொள்ளப்போகும் முதல் நபரை,ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.ஜப்பானின் ஆடை நிறுவனமான ஸோஸோவின் நிறுவனர் யுசாகு மேஸவா என்ற கோடீஸ்வரர் தான் நிலவிற்கு சுற்றுப்பயணம் செல்லவுள்ள முதல் பயணி ஆவார்.லாஸ் ஏஞ்சல்சில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலன் மஸ்க் இதை அறிவித்தார்.

ஜப்பானை சேர்ந்தவர் யுசாகு மாயிஸாகா. ரூ.21,000 கோடி சொத்துக்களுக்கு சொந்தகாரர்.42 வயதான யோசாகு,ஜப்பான் நாட்டின் கோடீஸ்வரர்கள் பட்டியலில்,18வது இடத்தில் உள்ளார்.ராக் பாடகராக வாழ்க்கையை துவங்கிய அவர் தற்போது ஆன்லைன் பேஷன் மால் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.இவரிடம் ஏராளமான விமானங்கள்,சொகுசு கப்பல்கள் உள்ளன.கடந்தாண்டு ரூ.770 கோடி செலவு செய்து ஒரு ஓவியத்தை வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க