• Download mobile app
03 May 2026, SundayEdition - 3735
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அனைத்திந்திய சுற்றுலா வாகன நலச்சங்கம் சார்பில் ஓட்டுனர் தின விழா

September 18, 2018 தண்டோரா குழு

கோவையை அடுத்த ஆர்.எஸ்.புரம் பகுதியில் அனைத்திந்திய சுற்றுலா வாகன நலச்சங்கத்தின் சார்பில் கூட்டம் இன்று நடைபெற்றது.இந்த சங்கம் சார்பில் வருடந்தோறும் ஓட்டுனர் தின விழா கடைபிடிக்கப்படுகிறது.இந்நிலையில் இந்த வருடத்திற்கான ஓட்டுனர் தின விழா கொண்டாட்டங்கள் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழகத்தில் இருந்து அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த ஓட்டுனர்கள் கலந்துக் கொண்டனர்.

இந்தவிழாவில்,சிறப்பாக பணிபுரிந்த ஓட்டுனர்கள் மற்றும் சமூக பணியில் ஈடுபட்டு வரும் ஓட்டுனர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.இந்த விழாவில் ரத்த தான முகாம் மற்றும் இலவச கண் சிகிச்சை முகாம்கள் நடைபெற்றன.குறிப்பாக முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், பெட்ரோல்,டீசல் விலை உயர்வால் ஓட்டுனர்கள் பெரிதும் பாதிக்கபட்டுள்ளதாகவும்,எனவே அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

மேலும் படிக்க