• Download mobile app
05 Jul 2025, SaturdayEdition - 3433
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அனைத்திந்திய சுற்றுலா வாகன நலச்சங்கம் சார்பில் ஓட்டுனர் தின விழா

September 18, 2018 தண்டோரா குழு

கோவையை அடுத்த ஆர்.எஸ்.புரம் பகுதியில் அனைத்திந்திய சுற்றுலா வாகன நலச்சங்கத்தின் சார்பில் கூட்டம் இன்று நடைபெற்றது.இந்த சங்கம் சார்பில் வருடந்தோறும் ஓட்டுனர் தின விழா கடைபிடிக்கப்படுகிறது.இந்நிலையில் இந்த வருடத்திற்கான ஓட்டுனர் தின விழா கொண்டாட்டங்கள் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழகத்தில் இருந்து அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த ஓட்டுனர்கள் கலந்துக் கொண்டனர்.

இந்தவிழாவில்,சிறப்பாக பணிபுரிந்த ஓட்டுனர்கள் மற்றும் சமூக பணியில் ஈடுபட்டு வரும் ஓட்டுனர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.இந்த விழாவில் ரத்த தான முகாம் மற்றும் இலவச கண் சிகிச்சை முகாம்கள் நடைபெற்றன.குறிப்பாக முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், பெட்ரோல்,டீசல் விலை உயர்வால் ஓட்டுனர்கள் பெரிதும் பாதிக்கபட்டுள்ளதாகவும்,எனவே அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

மேலும் படிக்க