• Download mobile app
20 May 2025, TuesdayEdition - 3387
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஓய்வுப்பெற்ற ஐ.ஏ.எஸ்.அதிகாரியின் மகன் விபத்தில் உயிரிழப்பு

September 18, 2018 தண்டோரா குழு

கோவையில் காரும்,இரு சக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த ஓய்வுப்பெற்ற ஐ.ஏ.எஸ்.அதிகாரியின் மகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கோவை லக்ஷ்மி மில் சந்திப்பு அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி ஐ.ஏ.எஸ். தேர்விற்கு பயிற்சி பெற்று வந்தவர் பிரனேஷ்பாபு(27).இவர்,பந்தைய சாலை பகுதியில் உடற்பயிற்சி செய்வதற்காக வழக்கம் போல் அதிகாலை தனது இரு சக்கர வாகனத்தில் வீட்டிலிருந்து கிளம்பியுள்ளார்.அப்போது எதிர்பாராத விதமாக அவினாசி சாலை சிட்ரா பகுதியிலிருந்து வந்த கர்நாடக பதிவு எண் கொண்ட கார் எதிரே வந்துள்ளது.இரு வாகனமும் நேருக்குநேர் மோதியதில்,இருசக்கர வாகனத்தில் வந்த பிரனேஷ்பாபு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.காரை ஓட்டிவந்தவர் தப்பி ஓடிவிட்டார்.

இதனையடுத்து பிரேத பரிசோதனைக்காக பிரனேஷ்பாபு உடல் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.இந்த விபத்து தொடர்பாக கோவை கிழக்கு போக்குவரத்து புலனாய்வு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.உயிரிழந்த பிரனேஷ்பாபு ஓய்வுப்பெற்ற ஐ.ஏ.எஸ்.அதிகாரி முத்துவீரன் என்பவருடைய மகன்.முத்துவீரன் கோவை மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் ஆணையர்,ஆட்சியாளராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க