• Download mobile app
17 Sep 2026, ThursdayEdition - 3872
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஓய்வுப்பெற்ற ஐ.ஏ.எஸ்.அதிகாரியின் மகன் விபத்தில் உயிரிழப்பு

September 18, 2018 தண்டோரா குழு

கோவையில் காரும்,இரு சக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த ஓய்வுப்பெற்ற ஐ.ஏ.எஸ்.அதிகாரியின் மகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கோவை லக்ஷ்மி மில் சந்திப்பு அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி ஐ.ஏ.எஸ். தேர்விற்கு பயிற்சி பெற்று வந்தவர் பிரனேஷ்பாபு(27).இவர்,பந்தைய சாலை பகுதியில் உடற்பயிற்சி செய்வதற்காக வழக்கம் போல் அதிகாலை தனது இரு சக்கர வாகனத்தில் வீட்டிலிருந்து கிளம்பியுள்ளார்.அப்போது எதிர்பாராத விதமாக அவினாசி சாலை சிட்ரா பகுதியிலிருந்து வந்த கர்நாடக பதிவு எண் கொண்ட கார் எதிரே வந்துள்ளது.இரு வாகனமும் நேருக்குநேர் மோதியதில்,இருசக்கர வாகனத்தில் வந்த பிரனேஷ்பாபு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.காரை ஓட்டிவந்தவர் தப்பி ஓடிவிட்டார்.

இதனையடுத்து பிரேத பரிசோதனைக்காக பிரனேஷ்பாபு உடல் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.இந்த விபத்து தொடர்பாக கோவை கிழக்கு போக்குவரத்து புலனாய்வு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.உயிரிழந்த பிரனேஷ்பாபு ஓய்வுப்பெற்ற ஐ.ஏ.எஸ்.அதிகாரி முத்துவீரன் என்பவருடைய மகன்.முத்துவீரன் கோவை மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் ஆணையர்,ஆட்சியாளராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க