• Download mobile app
20 May 2025, TuesdayEdition - 3387
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை ஈசா பொறியியல் கல்லூரியின் 6வது பட்டமளிப்பு விழா

September 17, 2018 தண்டோரா குழு

கோவை ஈசா பொறியியல்கல்லூரியின் 6வது பட்டமளிப்புவிழா இன்று நடைபெற்றது

கோவை பாலக்காடுசாலை,நவக்கரையில் அமைந்துள்ள ஈசா பொறியியல் கல்லூரியில் 6வது பட்டமளிப்புவிழா, கல்லூரி வளாகத்தில் உள்ள கலையரங்கில் இன்று நடைபெற்றது.இவ்விழாவிற்கு ஈசா பொறியியல் கல்லூரியின் தலைவர் டி.டி.ஈஸ்வரமூர்த்தி தலைமைதாங்கி 156 மாணவ,மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.கல்லூரி தாளாளர் டி.ஈ.சுஜாதா,தலைமை செயல் அலுவலர்கள் டி.ஈ.அஜித்,டி.ஈ.ஆதர்ஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கல்லூரி முதல்வர் ராபர்ட்கென்னடி அனைவரையும் வரவேற்று,கல்லூரி ஆண்டறிக்கையினை வாசித்தார்.இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கற்பகம் உயர்கல்விதுறை துணைவேந்தர் சுடலைமுத்து கலந்துக்கொண்டு மாணவ,மாணவியர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.

பின்னர் இவ்விழாவில் பேசிய கல்லூரியின் தலைவர் டி.டி.ஈஸ்வரமூர்த்தி,

“மாணவர்கள் அனைவருக்கும் உங்களின் வாழ்வின் முதல் வெற்றியாக கருத வேண்டும்.பல தகவல்களை உள்ளடக்கிய இந்த உலகில் தகவல்களை சேகரித்து, திறமைகளை வெளிக்கொண்டு,இதுபோன்ற பல வெற்றிகளை பெற வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்”.

இவ்விழாவில் அண்ணாபல்கலைக்கழக 16வது தரசான்றிதழ் பட்டத்தை எம். இ.,தகவல்தொழில்நுட்பம் துறை மாணவி சமனாபெற்றுக்கொண்டார்.மேலு‌ம் கல்லூரியின் சார்பாக ரூ.25 ஆயிரம் ரொக்க பரிசும் வழங்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து இளங்கலை பட்டப்படிப்பில் மெக்கானிக்கல் பிரிவில் 58 பேருக்கும்,சிவில்பிரிவில் 23 பேருக்கும்,கணினிஅறிவியல் பிரிவில் 10 பேருக்கும், இஇஇபிரிவில் 11 பேருக்கும்,இசிஇபிரிவில் 17 பேருக்கும்,பி. டெக்ஐடிபிரிவில் 2 பேருக்கும்,முதுகலை பட்டப்படிப்பில் ஸ்டக்சரில் இன்ஜினியரிங் பிரிவில் 10 பேருக்கும்,கட்டிடம் மற்றும் நிர்வாகம் பிரிவில் 3 பேருக்கும்,கணினிபிரிவில் 4 பேருக்கும்,தகவல்நுட்பம்பிரிவில் 11 பேருக்கும்,பவர் எலக்ட்ரானிக் பிரிவில் 3 பேருக்கும்,தயாரிப்பு பொறியியல் பிரிவில் 1 நபருக்கும்,எம்.பி.ஏ.பிரிவில் 3 ேருக்கும் என அனைத்து துறைகளிலும் உள்ள மொத்தம் 156 மாணவ,மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது.

மேலும் படிக்க