• Download mobile app
18 Jun 2026, ThursdayEdition - 3781
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

எச்.ராஜா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர உயர் நீதிமன்றம் அனுமதி

September 17, 2018 தண்டோரா குழு

பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்..ராஜா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள காட்டுபாவாபள்ளிவாசல் கிராமத்திற்குட்பட்ட மெய்யபுரம் பகுதியில் உள்ள கோயிலில் இருந்து நேற்று முன்தினம் விநாயகர் சிலையை தேவாலயம் உள்ள பகுதி வழியாக ஊர்வலமாக எடுத்து செல்வதில் பிரச்னை ஏற்பட்டது. இதனால் சம்பவ இடத்திற்கு வந்த பாஜ தேசிய செயலாளர் எச்.ராஜா நீதிமன்றம், போலீசார், இந்து அறநிலையத்துறையை மிகவும் கீழ்த்தரமாக விமர்சனம் செய்தார்.

உயர்நீதிமன்றத்தை தரக்குறைவான வார்த்தைகளால் ஹெச்.ராஜா விமர்சித்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் உலா வருகிறது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதையடுத்து, நீதிமன்றம், போலீசாரை பற்றி அவதூறாக பேசிய பாஜ தேசிய செயலாளர் எச்.ராஜா உள்பட 18 பேர் மீது திருமயம் காவல்நிலையத்தில் 8 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், உயர் நீதிமன்றத்தை தரக்குறைவான வார்த்தைகளால் ஹெச்.ராஜா விமர்சித்ததாக ராஜசேகர் என்பவரும், காங்கிரசைச் சேர்ந்த வழக்கறிஞர் சுதா என்பவரும் உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்தனர்.

இதனை ஏற்ற நீதிமன்றம், பா.ஜ.க. தேசிய செயலாளர் ஹெச்.ராஜா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி அளித்துள்ளது.அவமதிப்பு வழக்கு தொடர்ந்தால் விசாரிக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க