• Download mobile app
20 May 2025, TuesdayEdition - 3387
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

புழல் சிறையில் இருந்து 18 டிவிகள் பறிமுதல் !

September 14, 2018

புழல் சிறையின் முதல் வகுப்பு அறையில் இருந்து 18 டிவிக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தமிழக சிறைச்சாலைகளில் செல்போன் புழக்கம் தாராளமாக இருப்பதாகவும், கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களை கைதிகள் பயன்படுத்தி வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தது.

அதைப்போல் அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக் கொண்டு இந்த வசதிகளை செய்துகொடுப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. இதற்கிடையில், கடந்த சில நாட்களுக்கு முன் புழல் சிறைச்சாலையில் கைதிகளுக்கு சொகுசு வசதிகள் செய்யப்பட்டிருக்கும் புகைப்பட காட்சிகளும் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இதுபற்றி விசாரிக்க மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி சிறைச்சாலைகளில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், புழல் சிறையில் சிறைத்துறை டிஐஜி முருகேசன் தலைமையில் போலீசார் இன்று சோதனையில் ஈடுபட்டனர். சிறை வளாகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் சோதனையிட்டனர். அப்போது, தண்டனைப் பிரிவில் அனுமதியின்றி டிவி மற்றும் ரேடியோக்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, 18 டிவிக்கள், 2 எப்எம் ரேடியோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் படிக்க