• Download mobile app
20 May 2025, TuesdayEdition - 3387
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அனுமதியன்றி மரத்தை வெட்ட முயன்ற காருண்யா பல்கலைகழகம்– தடுத்து நிறுத்திய இயற்கை ஆர்வலர்கள்

September 12, 2018

கோவை காருண்யா பல்கலைகழகம் அனுமதியன்றி சிறுவாணி ரோடில் உள்ள மரங்களை வெட்ட முயற்சித்தனர் அங்கு வந்த இயற்கை ஆர்வலர்கள் சிலர் அதை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

கோவை சிறுவாணி ரோட்டில் காருண்யா பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. பல்கலைகழகத்தை சேர்ந்த சிலர் கல்லூரியின் முன்பு உள்ள கேட்டின் அருகில் இருந்த மரத்தை எந்த ஒரு அனுமதியன்றி வெட்ட முயன்றனர். அப்போது அங்கு வந்த இயற்கை ஆர்வலர்கள் சிலர் அதனை தடுத்து நிறுத்தி அவர்களிடம் கேள்வி கேட்டனர்.

இது குறித்து இயற்கை ஆர்வலர்கள் கூறுகையில்,

பல்கலைகழகத்தினை சேர்ந்த சிலர் மரங்களை வெட்டி கொண்டு இருந்தனர்.அதுகுறித்து நாங்கள் கேட்டதற்கு கல்லூரியில் இருக்கும் கேமராவை இந்த மரம் மறைப்பதால் மரத்தை வெட்டுகிறோம் என்றனர்.இதையே தொடர்ந்து இவர்கள் செய்து வருகிறார்கள்.எந்த ஒரு அனுமதியன்றி இங்கு இருக்கும் மரத்தை வெட்டி கொண்டே போகின்றார்கள்.இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.மரமும் ஒரு உயிர் தான் அதனை காக்க வேண்டியது நம் கடமை.இதுபோன்று அனுமதியன்றி மரத்தை வெட்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் படிக்க