• Download mobile app
19 Mar 2026, ThursdayEdition - 3690
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குட்கா ஊழல் வழக்கில் டிஎஸ்பி மன்னர் மன்னன், காவல் ஆய்வாளர் சம்பத்துக்கு சிபிஐ சம்மன்

September 11, 2018 தண்டோரா குழு

குட்கா ஊழல் வழக்கில் டிஎஸ்பி மன்னர் மன்னன்,காவல் ஆய்வாளர் சம்பத்துக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.

குட்கா ஊழல் விவகாரம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் அமைச்சர் விஜயபாஸ்கர்,முன்னாள் டிஜிபி ஜார்ஜ்,சென்னை முகப்பேரில் உள்ள டிஜிபி ராஜேந்திரன் வீடு, விழுப்புரத்தில் பல்பொருள் அங்காடி உரிமையாளர்,முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா ஆகியோர் வீடுகள் உள்பட 40-க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.இந்த சோதனை தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சோதனையை தொடர்ந்து இந்த வழக்கில் தொடர்புடைய குட்கா நிறுவன பங்குதாரர்கள் மாதவராவ்,உமாசங்கர் குப்தா,உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில் முருகன்,கலால் வரித்துறை அதிகாரி பாண்டியன் தரகர்கள் நந்தகுமார்,ராஜேஷ் ஆகிய 6 பேர் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

இதையடுத்து,கைதான 5 பேரையும் 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சிபிஐ தரப்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இம்மனுவை விசாரித்த சிபிஐ நீதிமன்றம் குட்கா ஊழல் வழக்கில் கைதான 5 பேரையும் 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு அனுமதி வழங்கி உத்திரவிட்டது. இந்நிலையில்,குட்கா ஊழல் வழக்கில் டி.எஸ்.பி. மன்னர் மன்னன்,காவல் ஆய்வாளர் சம்பத்துக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.ஊழல் தொடர்பாக இருவர் வீடுகளிலும் சிபிஐ சோதனை நடத்தியது.

மேலும்,குட்கா ஊழல் நடைபெற்றதாக கூறப்படும் சமயத்தில், செங்குன்றம் சரக உதவி ஆணையராக மன்னர் மன்னன் பதவி வகித்தார்.செங்குன்றம் காவல் ஆய்வாளராக சம்பத் பொறுப்பு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க