• Download mobile app
21 Jun 2026, SundayEdition - 3784
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பேரூர் பெரிய பட்டமாக பதவி ஏற்றார் மருதாசல அடிகளார்!

September 10, 2018 தண்டோரா குழு

கோவை சிறுவாணி சாலையில் அமைந்துள்ள பேரூரில் கடந்த 1956 ம் ஆண்டு தமிழ் கல்லூரியை நிறுவியவர் பேரூராதீனம் தவத்திரு சாந்தலிங்க ராமசாமி அடிகளார்.1925 ம் ஆண்டு பிறந்த அவர் தமிழ் வளர்ச்சிக்காக பல்வேறு தொண்டுகள் புரிந்துள்ளார்.மேலும் ஆலயங்களில் தமிழ் வழிபாட்டு நெறிகளை உலக அளவில் அறிமுகப்படுத்தி நூற்றுக்கணக்கான திருக்கோவில்களில் திருநெறிகளை நடத்தி தமிழ் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டவர்.

பேரூராதீனம் தவத்திரு சாந்தலிங்க ராமசாமி அடிகளார்(94)கடந்த சில மாதங்களாக வயது மூப்பு காரணமாக வெளியூர் நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் முழு ஓய்வில் இருந்து வந்தார்.இந்நிலையில் கடந்த பத்து நாட்களாக மூச்சு திணறலால் அவதிப்பட்டு வந்த அவருக்கு பேரூர் சாந்தலிங்க மடத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த சூழலில் கடந்த வாரம் உயிரிழந்தார்.இதனையடுத்து அவரது உடல் மடத்திலேயே நல்லடக்கம் செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து இளைய பட்டமாக இருந்த மருதாசல அடிகளார் இன்று முறைப்படி பெரிய பட்டமாக பொறுப்பேற்றுக்கொண்டார்.இந்த விழாவில் மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் உட்பட பல மடாலயங்களின் தலைவர்கள் கலந்துக் கொண்டனர்.முன்னதாக பொறுப்பேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தமிழுக்காக பேரூர் ஆதினம் பாடுபடும்,தமிழை வளர்க்க என்ன முயற்சிகள் பெரிய பட்டம் ராமசாமி அடிகளார் செய்தாரோ அதே வழியில் பாடு படுவோம் என தெரிவித்தார்.

மேலும் படிக்க