• Download mobile app
19 May 2025, MondayEdition - 3386
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தேசிய பஞ்சாலை கழக தொழிலாளர்கள் சம்பள ஒப்பந்த பிரச்சனை தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு

September 3, 2018 தண்டோரா குழு

தேசிய பஞ்சாலை கழக தொழிலாளர்களின் சம்பள ஒப்பந்த பிரச்சனையில் தமிழக அரசு நேரடியாக தலையீடக்கோரி அனைத்து தொழிற்சங்கத்தின் சார்பாக மாவட்ட ஆட்சித்தலைவரிடம் இன்று(செப் 3)மனு அளித்தனர்.

தமிழகத்தில் தேசிய பஞ்சாலை கழகத்திற்கு சொந்தமான 7 பஞ்சாலைகளில் 3000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.இவர்களுக்கு ஐந்தாண்டுக்கு ஒரு முறை ஊதிய ஒப்பந்தம் போடப்பட்டு கடந்த 50 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் கடந்த மே 31ம் தேதி பழைய சம்பள ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில் புதிய ஊதிய ஒப்பந்தம் போடாமல் நிர்வாகம் காலம் தாழ்த்தி வருகிறது.

இதனைக் கண்டித்து கடந்த 20ம் தேதி முதல் பஞ்சாலை தொழிலாளர்கள் வேலை நிறுத்ததில் ஈடுபட்டு பல்வேறு போராட்டங்களையும் நடத்தி வந்தனர்.மண்டல தொழிலாளர் ஆணையரின் தலைமையில் முத்தரப்பு பேச்சு வார்த்தை நடத்தியும்,நிர்வாகம் தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்கவில்லை.நிர்வாகத்தின் அலட்சியத்தால் நாளொன்றுக்கு ஒரு கோடி ரூபாய் உற்பத்தி இழப்பும்,தொழிலாளர்களுக்கு ரூபாய் 15 லட்சம் சம்பள இழப்பும் ஏற்படுகிறது.

மேலும்,தமிழகத்திலுள்ள தேசிய பஞ்சாலை கழகத்தில் பணிபுரியும்,தொழிலாளர்களின் நலன் கருதி,தமிழக அரசு நேரடியாக தலையீட்டு புதிய சம்பள ஓப்பந்தத்தை ஏற்படுத்தக்கோரி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பாக மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு கொடுத்தனர்.

மேலும் படிக்க