• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாநகர ஆணையாளரிடம் முன்னாள் மேயர் மனு

September 3, 2018 தண்டோரா குழு

சாலைகளை சீரமைக்க கோரி கோவை மாநகர ஆணையாளரிடம் முன்னாள் மேயர் இன்று மனு அளித்தார்.

கோவையை அடுத்த சாய்பாபாகாலனி,கணபதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பல ஆண்டுகளுக்கு முன்னர் போடப்பட்ட சாலைகள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது.குறிப்பாக பாதாள சாக்கடை,குடிநீர் குழாய் இணைப்புகள் உள்ளிட்ட பணிகளுக்காக சாலைகள் தோண்டப்பட்டதன் காரணமாக,முற்றிலும் சேதமடைந்து உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த சாலைகளை சீரமைக்க கோரி காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கோவை மாநகரின் முன்னாள் மேயரான காலனி வெங்கடாச்சலம் என்பவர் கோவை மாநகர ஆணையாளரிடம் புகார் மனு அளித்தார்.இந்த சாலைகளை பயன்படுத்தும் மக்கள் தினமும் அவதிப்படுவதாகவும்,வாகன ஓட்டிகளும் நடந்து செல்பவர்களும் கீழே விழும் நிலை ஏற்படுவதால் உடனடியாக சாலைகளை செப்பனிட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

மேலும் படிக்க