• Download mobile app
19 Dec 2025, FridayEdition - 3600
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இனி தமிழில் மட்டுமே கையெழுத்திடுவேன் – ஜி.வி.பிரகாஷ்குமார்

September 3, 2018 தண்டோரா குழு

தமிழ் திரையுலகில் வெயில்’ திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராய் அறிமுகமாகி, தற்போது நடிகராக வலம் வருபவர் ஜி.வி.பிரகாஷ்குமார்.தற்போது பல திரைப்படங்களில் நடித்து வரும் இவர் அவ்வப்போது சமூக பிரச்சனைகளுக்கும் குரல் கொடுத்து வருகிறார்.

இந்நிலையில்,”மக்கள் பாதை”அமைப்பின் சார்பாக நடந்த தமிழ் கையெழுத்து இயக்க விழாவில் சகாயம் ஐ.ஏ.எஸ் உடன் நேற்று கலந்துகொண்டார்.அப்போது இனி தமிழில் மட்டுமே கையெழுத்திடுவேன் என உறுதியேற்றுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,

`உலகம் வென்ற தமிழ்,நமை கர்வம் கொள்ள வைத்த தமிழ்,எனை ஆட்கொண்ட தமிழ்…இனி புதிய விதி செய்யும் என் “கையெழுத்துகள்” தமிழில் மட்டும் என்று உளமாற உறுதி ஏற்கிறேன்… தமிழ்விதியெனசெய்” எனக் கூறியுள்ளார்.மேலும்,அந்த பதிவில் தன் பெயரின் முன்னெழுத்தையும் தமிழ்ப்படுத்தி கோ.வெ.பிரகாஷ்குமார் எனக் கையெழுத்திட்டு புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

மேலும் படிக்க