August 31, 2018
தண்டோரா குழு
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 4 லட்சம் வாக்காளர்கள் குறைவாக உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.சென்னை தலைமை செயலகத்தில் இன்று காலை அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு ஆலோசனை நடத்தினார்.இக்கூட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு,வாக்காளர் பட்டியரில் பெயர் சேர்த்தல்,திருத்தம் மற்றும் நீக்கம் செய்வது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.மேலும் வாக்காளர் பட்டியல் குளறுபடி,பூத் ஏஜெண்ட் நியமனம் உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகள் குறித்து கட்சி பிரதிநிதிகளிடம் தலைமை தேர்தல் அதிகாரி கேட்டறிந்தார்.
இக்கூட்டத்திற்கு பின் பேசிய அவர்,
நாளை (செப்.,1) வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும்,இறுதி வேட்பாளர் பட்டியல் ஜனவரி 4ம் தேதி வெளியாகும்.பின்னர் சிறப்பு வாக்காளர் முகாம் செப்டம்பர் 9 மற்றும் 23,அக்டோபர் 7, 14 போன்ற தேதிகளின் நடைபெறும்.இந்த ஆண்டு இதுவரை 5.72 லட்சம் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.இதனால் கடந்த ஆண்டை காட்டிலும் 4 லட்சம் வாக்காளர்கள் குறைவாக உள்ளனர் என தெரிவித்துள்ளார்.