• Download mobile app
04 Jul 2025, FridayEdition - 3432
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

திமுகவும்,ஜனசங்கமும்தான்,காங்கிரஸ் ஆதிக்கத்தை எதிர்த்தன – நிதின் கட்கரி

August 30, 2018 தண்டோரா குழு

திமுகவும்,ஜனசங்கமும் தான்,காங்கிரஸ் ஆதிக்கத்தை எதிர்த்தன என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.

திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் தலைமையில் சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் கலைஞரின் புகழுக்கு வணக்கம் என்ற தலைப்பில் நினைவேந்தல் கூட்டம் நடைபெறுகிறது.

கருணாநிதி புகழஞ்சலி கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்,சீதாராம் யெச்சூரி, முன்னாள் பிரதமர் தேவகவுடா,காஸ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா,மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உள்ளிட்டோர் பங்கேற்று புகழ் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிகழ்வில் பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசுகையில்,

“கருணாநிதியை தமிழக தலைவராக மட்டும் பார்க்க வேண்டாம்,அவர் தேசிய தலைவர். தமிழகத்திற்கு மட்டுமல்ல,இந்திய ஜனநாயகத்திற்கு கருணாநிதி பங்களித்தார்.திமுகவும், ஜனசங்கமும் தான்,காங்கிரஸ் ஆதிக்கத்தை எதிர்த்தன.எமெர்ஜென்சியை இணைந்து எதிர்த்ததும் இவ்விரு கட்சிகள் தான்.கருணாநிதிக்காக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன.இரு அவைகளிலும் உறுப்பினராக இருந்திராத கருணாநிதிக்காக அவை ஒத்தி வைக்கப்பட்டது சரித்திர நிகழ்வு”.இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் படிக்க