• Download mobile app
19 Jun 2026, FridayEdition - 3782
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் தேசிய அளவிலான டார்ட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டி துவக்கம்

August 30, 2018 தண்டோரா குழு

தமிழகத்தில் முதல் முறையாக,சிறிய அம்பை எய்து இலக்கை அடைய செய்யும்,டார்ட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டி கோவையில் உள்ள டெல்லி பப்ளிக் பள்ளியில் துவங்கி உள்ளது.

14ஆவது தேசிய அளவிலான டார்ட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டி வருகிற 2 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.இப்போட்டிகளில் நாடு முழுவதும் உள்ள பத்திற்கும் மேற்பட்ட மாநிலங்களை சேர்ந்த 7௦ பேர் கலந்து கொண்டு உள்ளனர்.

இதில் சீனியர் மற்றும் ஜூனியர் என இரு பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்படுகிறது.இந்த போட்டிகளின் மூலமாக மாணவர்கள் மன ஒருங்கிணைப்புடன் இருக்க உதவியாக உள்ளதாக கூறுகின்றனர்.குறிப்பாக படிப்புகளில் முழு கவனத்துடன் இருக்கவும் இந்த போட்டி உதவுகிறது.

மேலும் இந்த புதுமையான விளையாட்டு குறித்து மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த போட்டிகள் நடத்தப்படுவதாக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகளும்,கோப்பையும் வழங்கப்பட உள்ளது. போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்கள் அனைவருக்கும் தேவையான அடிப்படை வசதிகளை பள்ளியில் செய்துள்ளதாக பள்ளியின் முதல்வர் தெரிவித்தார்.

மேலும் படிக்க