• Download mobile app
19 May 2025, MondayEdition - 3386
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் போட்டியின்றி தேர்வு

August 27, 2018 தண்டோரா குழு

திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார் என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

தலைவர் மற்றும் பொருளாளர் பதவிகளுக்காக வேட்புமனு தாக்கல் 26ம் தேதி நடைபெறும் என்றும்,மனுக்களை வாபஸ் பெற 27-ஆம் தேதி கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டது.இதில்,திமுக தலைவர் பதவிக்கு மு.க ஸ்டாலினும்,பொருளாளர் பதவிக்கு துரை முருகனும் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தனர்.

இந்நிலையில்,நேற்று வரை இரு பதவிகளுக்கும் ஸ்டாலின்,துரைமுருகனை தவிர வேறு யாரும் வேட்புமனுவை தாக்கல் செய்யவில்லை.இதனால்,அவர்கள் இருவரும் போட்டியிட்ட பதவிகளுக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.இதனையடுத்து இன்றைய தினம் மனுக்களை இருவரும் வாபஸ் பெறாததால் இருவரும் போட்டியின்றி தேர்வாகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறுகையில்,

தலைவர் மற்றும் பொருளாளர் பதவிகளுக்கு ஸ்டாலின் மற்றும் துரைமுருகன் ஆகியோர் மட்டுமே மனு தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில் தங்கள் மனுக்களை வாபஸ் பெறும் காலம் முடிந்தும் அவர்கள் இருவரும் வாபஸ் பெறவில்லை மனுக்களை வாபஸ் பெறாததால் இரு பதவிகளும் போட்டியின்றி நிரம்புவது உறுதியாகிவிட்டது.எனினும்,நாளை திமுக பொதுக்குழுவில் திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிடுவார் எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க