• Download mobile app
19 May 2025, MondayEdition - 3386
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கேரளா மக்கள் சகஜ வாழ்க்கைக்கு திரும்பும் வரை மத்திய அரசு உதவி புரியும்-சுதர்சன் பகத்

August 27, 2018 தண்டோரா குழு

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளா மக்கள் சகஜ வாழ்க்கைக்கு திரும்பும் வரை மத்திய அரசு உதவி புரியும் என மத்திய பழங்குடியின நலத்துறையின் இணையமைச்சர் திரு.சுதர்சன் பகத் தெரிவித்துள்ளார்.

பழங்குடியின மக்களின் பண்பாட்டு பதிவுகள் என்ற தலைப்பிலான தேசிய கருத்தரங்கம் இன்று கோவையில் நடைபெற்றது. உதகையிலுள்ள பழங்குடியினர் ஆராய்ச்சி மையம் சார்பில் நடைபெற்ற இந்த கருத்தரங்கை மத்திய பழங்குடியின நலத்துறையின் இணையமைச்சர் திரு.சுதர்சன் பகத் தொடங்கி வைத்தார்.இதையொட்டி இடம் பெற்றிருந்த புகைப்பட கண்காட்சியையும் அமைச்சர் திறந்து வைத்தார்.

தமிழகத்தில் உள்ள 36 பண்டைய பழங்குடியினரின் மேம்பாட்டிற்காக மத்திய அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்து பட்டியலிட்டார்.இந்த கருத்தரங்கில் வானதி சீனிவாசன்,புதுவை மொழியியல் பண்பாட்டு ஆய்வு மைய நிறுவனர் பக்தவத்சல பாரதி, தமிழக பழங்குடியினர் ஆய்வு மைய இயக்குநர் M. சுப்ரமணியம் உட்பட பலர் உரையாற்றினர்.

பின்னர்செய்தியாளர்களிடையே பேசிய அமைச்சர்,

“கேரளா மாநிலத்தில் நிகழ்ந்த இயற்கை சீற்றம் மற்றும் வெள்ளம் எதிர்பாராத ஒன்று.பிரதமர் மோடி கேரளா மாநில வெள்ள சேதங்களை நேரில் பார்வையிட்டுள்ளார்.மத்திய அரசு கேரளா மாநிலத்திற்கு அனைத்து உதவிகளை அளிக்கும்.கேரளா மக்கள் சகஜ வாழ்க்கைக்கு திரும்பும் வரை மத்திய அரசு உதவி புரியும் என்றும்,கேரளா மாநிலத்தை வளர்ச்சி பாதைக்கு எடுத்து வர பிரதமர் மோடி அனைத்து முயற்சிகளை மேற்கொள்வார் என்றார்”.

மேலும் படிக்க