• Download mobile app
19 Dec 2025, FridayEdition - 3600
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆசிய விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழக வீரா்களுக்கு ஊக்கத் தொகை

August 27, 2018 தண்டோரா குழு

ஆசிய விளையாட்டு போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீரா்களுக்கு அரசு சாா்பில் தலா ரூ.20 லட்சம் ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளாா்.

இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் 18வது ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பல வீரர்கள் வீராங்கனைகள் இந்தியா சார்பில் கலந்து கொண்டனர்.இதில் ஸ்குவாஷ் விளையாட்டில் தமிழகத்தைச் சோ்ந்த ஜோஸ்ன சின்னப்பா,தீபிகா பல்லிக்கல்,சௌரவ் கோஷலுக்கு ஆகியோா் வெண்கலப் பதக்கம் வென்றனா்.

இந்நிலையில் தமிழக முதலமைச்சர் பழனிசாமி ஆசிய விளையாட்டு தொடரின் ஸ்குவாஷ் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற ஜோஸ்னா சின்னப்பா,தீபிகா பல்லிக்கல்,சௌரவ் கோஷல் ஆகியோருக்கு தலா ரூ.20 லட்சம் ஊக்கத் தொகையாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளாா்.

ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியா இதுவரை 7 தங்கம்,10 வெள்ளி,20 வெண்கலம் என மொத்தம் 37 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது.ஆசிய விளையாட்டு போட்டியில் 100 மீ ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப்பதக்கம் வென்ற டூட்டி சந்துக்கு ரூ.1.5 கோடி பரிசை ஒடிசா அரசு அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க